இருமலை குணமாக்கும் வெற்றிலை, துளசி சூப்.
Nattu maruthuvam for cough in tamil சளி, இருமல், மற்றும் தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள், வெற்றிலை மற்றும் துளசியை கொண்டு சூப் செய்து குடிப்பதால் இப்பிரச்சனையிலிருந்து எளிமையாக விடுபடலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் தண்ணீர்1/2 டீஸ்பூன் சீரகப் தூள்
1/2 டீஸ்பூன் மிளகு தூள்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு கைப்பிடி அளவு துளசி இலை
5 அல்லது 6 இலை வெற்றிலைகள் -
ஒரு டீஸ்பூன் புளி கரைசல்
ஒரு துண்டு இஞ்சி
ஒரு தக்காளி
ஒரு சிவப்பு மிளகாய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
இஞ்சியை பாதியாக வெட்டி நசுக்கிகொள்ளவும். பின்னர், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் 100 மிலி அளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர், தண்ணீர் சூடானவுடன், மஞ்சள் தூள், துளசி இலை, வெற்றிலை இலைகள், புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்தால் சத்தான வெற்றிலை துளசி சூப் ரெடி.