சில எளிமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்
Siddha vaithiyam tamil நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து சுடுநீரில் கலந்து காலை மாலை என இருவேளை பருகிவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்.
பீட்ரூட் சாறு மற்றும் வெள்ளரி சாறுனை ஒன்றாக கலந்து பருகி வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் நன்கு சுத்திகரிப்பு செய்யப்படும்.
பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி எலும்பிச்சை சாற்றில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடய செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், இது ஆண்மை சக்தியை அதிகரித்து ஊடலின் போது இனிமையான உணர்வை ஏற்படுத்துகிறது.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதை ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் கலந்து உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். மேலும், ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
கற்பூரம், பெருங்காயம், சுக்கு, சாம்பிராணி ஆகியவற்றை சமமாக எடுத்து வடித்த கஞ்சியில் கலக்கி மீண்டும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் மூச்சுப்பிடிப்பு நீங்கும்.
ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளவும். தினமும், அதை சோப்புக்கு பதிலாக சருமத்தில் தேய்த்து நீராடினால் சரும நோய்கள் நீங்கும்.
வெள்ளை பூண்டுடன் வெற்றிலை சேர்த்து நன்கு மசிய அரைத்து தினமும் சருமத்தில் தேய்த்து நீராடினால் தேமல் குணமாகும்.
ஒரு துண்டு சுக்கை தோலை நீக்கி 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை என இருவேளை பருகி வந்தால் மூக்கடைப்பு விரைவில் விலகும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியுடன் சிறிதளவு தேனை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
ஆடாதொடை பொடி, நிலவேம்பு பொடி, விஷ்ணுகரந்தை பொடி, ஆகியவற்றுடன் கிருந்தை நாயகம் இலை, மற்றும் குப்பைமேனி இலையை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை என இருவேளை பருகி வந்தால் எந்த வகை காய்ச்சலும் மூன்று நாட்களில் சரியாகி விடும். மேலும் உடல்வலியும் குணமாகும்.
சிறிதளவு சர்பகந்தா பொடியை தேன் அல்லது பாலில் கலந்து காலை, மாலை பருகி வர இரத்த அழுத்தம் நீங்கி, இரவில் தூக்கம் நன்றாக வரும். மேலும், மன சோர்வும் நீங்கும்.